செய் நன்றி!




பெருத்த இரையை

தட்டுத் தடுமாறி சுமந்து

வந்த எறும்பு ஒன்று

நிலை தடுமாறி

நீரில் விழ அதை

உற்று நோக்கிக்

கொண்டிருந்தவனின்

நினைவில்

செய் நன்றிக்காக

புறா இலை பறித்து

போட எறும்பு அதன்

மீதேறி கரை சேர்ந்த

கதை நினைவில் மோதி

மீளத் துவங்கியிருந்த

நொடியில்

அந்த எறும்பு

இறந்து விட்டிருக்கக்கூடும்!


நன்றி:திண்ணை:http://www.thinnai.com/?cmd=displaystory&story_id=31002068&format=html

நன்றி:கீற்று:http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3173:2010-02-06-06-05-42&catid=2:poems&Itemid=88

2 Comments:

  1. Unknown said...
    அருமை..

    வாழ்த்துக்கள்..
    aazhimazhai said...
    ரொம்ப நல்ல இருக்கு ....

Post a Comment



Older Post Home

Blogger Template by Blogcrowds