செய் நன்றி!




பெருத்த இரையை

தட்டுத் தடுமாறி சுமந்து

வந்த எறும்பு ஒன்று

நிலை தடுமாறி

நீரில் விழ அதை

உற்று நோக்கிக்

கொண்டிருந்தவனின்

நினைவில்

செய் நன்றிக்காக

புறா இலை பறித்து

போட எறும்பு அதன்

மீதேறி கரை சேர்ந்த

கதை நினைவில் மோதி

மீளத் துவங்கியிருந்த

நொடியில்

அந்த எறும்பு

இறந்து விட்டிருக்கக்கூடும்!


நன்றி:திண்ணை:http://www.thinnai.com/?cmd=displaystory&story_id=31002068&format=html

நன்றி:கீற்று:http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=3173:2010-02-06-06-05-42&catid=2:poems&Itemid=88




எறும்பு ஒன்று கனத்து பெருத்து
என்னை துரத்தி வந்ததாக
கண்ட கனவை
ஒரு வித பயத்தோடு
அம்மாவிடம் கூறினேன்..
வாஞ்சையோடு அழைத்தவள் இருகரம்
அணைத்து உறங்க வைத்து கொண்டாள்..
தொடர்ந்து துரத்தி வந்த
அந்த உருவத்தோடு இப்போது
சண்டையிட்டு கொண்டிருக்கிறேன்
அம்மாவின் அரவணைப்போடு...

- நவீன்.

வெக்கை நிறைந்த இப்பாலை நிலத்தின் கானல் நீரில் குளித்துக் கொண்டிருக்கிறேன்.பேனாவின் இடையேயான பிசுபிசுப்பு மையுனுள் இறங்க, அதிகரித்து கொண்டே இருக்கிறது என் அம்மாவினுடேயான இடைவெளிப்போல்.
இந்த இடைவெளி எதனால் விழைந்தது என்று எண்ணிக்கொண்டிருக்கிறேன்.அம்மா உடன் சகஜமாக சிரித்து பேசும் அறை நண்பனை காணும்போதெல்லாம் குற்ற உணர்வு மேலிட தொலைபேசியில் அழைக்கிறேன்.

நல்லா இருக்கியாம்மா?
ம்ம்...நல்லா இருக்கேன்பா.
நீ நல்லா இருக்கியா?
ம்ம்..நல்லா இருக்கேன்.
உடம்பு எப்படி இருக்கு?
பரவாயில்லப்பா..
சரிப்பா உடம்ப பார்த்துக்க.
வச்சிருப்பா.நேரம் கெடச்சா போன் பண்ணு.

சாப்டியாம்மா? என்று கேட்பதற்குள் முற்று பெற்று விடுகிறது உரையாடல்.
இதற்கு மேல் கேட்பதற்கோ,சொல்வதற்கோ ஏதும் இன்றி வெற்றிடம் வந்து நிரப்பி கொள்கிறது.

"என்ன சுகிம்மா இன்னுமா பால் குடிக்கிறான் உங்க பையன்?நாலு வயசாகுது.இன்னும் என்ன?சீக்கிரம் நிறுத்துங்க"
நினைவலைகள் முற்றம் பார்க்க துவங்குகின்றன.ஒருவேளை பால் குடிப்பதை நிறுத்திய உடனே எனதான இடைவெளி தொடங்கி விட்டதோ என்னவோ?

வங்கியில் பணம் எடுக்கும் பொருட்டு அரக்கோணம் வரை செல்ல நேருகையில் என் அக்காவின் பராமரிப்பில் விட்டுச் செல்வாள்.அவ்வாறு செல்கையில் அடுத்த ஊரில் இருந்த எனது தாத்தாவின் வீட்டில் தங்கிச் செல்வது வழக்கம்.அப்படியோர் பிரிவு நாளில் யாருமற்ற இருண்ட சாலையில் சூனியத்தின் வெளிச்சத்தில் கண்களில் நீர் வழிய,அவ்வூரை அடைந்து அவள் அறிந்தால் அடிப்பாள் என்றெண்ணி ஓர் கட்டிடத்தின் பின் ஒளிந்து அவளை பார்த்து அழுது கொண்டு இருந்தேன். பிரிவு நாட்களில் பாடப்புத்தகங்களும்,விடுமுறை நாட்களில் என் வீடு ஆட்டுக்குட்டிக்களுமே ஆறுதலாய் இருந்தன.
சொல்லிச் சென்ற நாட்களுக்குள் வர இயலாது போகும்போது, ஒவ்வொரு பேருந்து வருகையின் போதும் ஆவலோடு சென்றுப்பார்ப்பேன்.அவள் வராதது கண்டு புழுதி கண்ணை மறைக்க அழுகை பீறிட்டு எழும்.

ஓரிரு நாட்கள் கழித்து பை நிறைய தின்பண்டகளுடன் வருவாள்.அவளின் வருகை அத்தின்பண்டங்களை விட இனிப்பானதாக இருக்கும். மகிழ்ச்சியில் ஓடிச்சென்று அவள் கால்களைக் கட்டிக் கொள்வேன்.பொங்கி வரும் கண்ணீரோடு ஆரத்தழுவியபடியே வீட்டுக்கு அழைத்து வந்து தின்பண்டங்களை பகிர்ந்து அளிப்பாள்.என் அக்காவிற்கு தெரியாமல் ஒரு துண்டு கூடுதலாய் எனக்கு கிடைக்கும்.

ஒரு சில ஆண்டுகளுக்குள் அவள் கால்களை கட்டிக் கொண்ட என் கைகள் பின் அவள் கைகளை கட்டிக் கொண்டன.இன்று அவளுடன் நடந்து செல்கையில் இரண்டு அடிகள் இடைவெளி கூடவே வருகிறது.கடைசியாய் அவளின் கை பிடித்து நடந்த நாட்களின் நினைவு கூட மனதிலிருந்து அகன்று விட்டிருக்கிறது.

இந்த வார இறுதியிலும் அவளைத் தொலைபேசியில் அழைக்கக் கூடும்.அதே நல விசாரிப்புகளுடன் அந்த அழைப்பும் முடிந்துவிடக்கூடும்.

இனிவரும் அழைப்புகளும்!



மறு ஒருமுறை
மனம் ஏங்குகிறது
மழை உனை ரசித்த
இந்நாளுக்காக !

பொல்லாத விழிகள் கொண்டு
எனது மௌனத்தை
விமர்சித்து சென்றாய்
நான் சிலையானேன் அங்கேயே !

விழிகள் மூடி
யாசிக்க தொடங்குகிறேன்
மறுமொருமுறை
இதே மழை நாளுக்காக !

- ஆறுமுகம் முருகேசன்.

சிகரெட் புகையுடன் தேநீரையும் பருகிக் கொண்டிருந்த ஓர் அதிகாலை மழை நாளில் தீராத அழகுடன் நடந்து வந்தாய்.உன் உடல் தழுவிய மழைத்துளிகள் மலர்துளிகளாய் மாற,ஆழ்நிலை தியானத்தில் இருந்த எனது வியர்வை சுரப்பிகள் சூடேறத் துவங்கியிருந்தன.இதழ் மூடியிருந்த சாலையோர ரோஜாக்கள் ஆச்சர்யத்தில் மலரத் துவங்க,மலர்ந்து இருந்தவைகளோ மோட்சத்தை எய்திருந்தன.உடல் நனைத்திருந்த மழைத்துளிகள் துணையோடு வறண்ட நாவுடன்,

"மழை வருவதாய் இருந்தால் இனி வெளிவருவதை நிறுத்தி விடு " என்றவனை

விழிகள் விரிய, சிறிது மிரட்சியுடன், "ஏன்?" என்றாய்.

"ஊரெங்கும் பொழிய வேண்டிய மழை முழுதும் உன் மீது பொழிவதை பார்.இந்நிலை நீடித்தால் நீ செல்லும் இடமெங்கும் வெள்ளப்பெருக்கும், மற்ற இடங்களில் வறட்சியும் ஏற்பட வாய்ப்புண்டு."

கண்ணில் புன்னகையையும்,உதட்டில் கோபத்தோடும்,"ஏய்! மிஸ்டர்,என்ன பேசுறீங்க?என்ன வேண்டும் உங்களுக்கு?" என்றாய்.

"உன் நட்பு வேண்டும்.

எதற்கு?

உன் கண்ணின் கதிர்கள் என் கவனம் கலைக்கின்றன.கனத்த முலைகளோ என்னை மூர்ச்சையடைய வைக்கின்றன.நீ இதழ் நனைக்கும் தருணங்களில் என் உயிர் உறிஞ்சப்படுகிறது.உன்னால் ஓர் உயிர் போகலாமா?அதனால்தான் சொல்கிறேன் என்னை காதலித்து விடு.

என்ன?நட்பு வேண்டும் என்றாய்.இப்போது காதலிக்கச் சொல்கிறாய்.

நட்புதான் வேண்டும்.இலவச இணைப்பாய் உன் காதலையும் தந்து விடு.

மாட்டேன் என்றால்?

தினம் இருகவிதைகள் எழுதி உனக்கு தபால் செய்ய நேரிடும்.

அய்யோ.. அதற்க்கு உன் நட்பே மேல்.மீண்டும் சொல்கிறேன் நட்பு மட்டும்தான்.இலவச இணைப்பு எல்லாம் இல்லை." என்றாய் காதலை மறைத்தபடி.

மலர்ந்திருந்த சாலையோர கூடை ரோஜாக்கள் பறக்கத் துவங்கியிருந்தன.

கரையோடு அலை உறவு கொண்டிருந்ததைக் கண்ட சிறு நண்டு நாணத்தில் ஓடி ஒளிந்து கொண்ட பின் ஓர் மாலை நேரத்தில் உன்னோடு அமர்ந்திருந்தேன்.

"ஒரு கவிதை சொல்.

என்ன திடீரென்று?உனக்குத்தான் என் கவிதைகள் பிடிக்காதே.

கவிதை எழுதுவேன் என்று பிற்றிக் கொள்கிறாயே.அப்படி என்னதான் எழுதுகிறாய் என்று பார்க்க வேண்டாமா?

ம்..என்றபடி சொல்லத்துவங்கியிருந்தேன்

கவிதை சொல் என்கிறாய்!
கண்மூடி தியானிக்கிறேன்
காதலாய் நீ
காமமாகவும் நீ
காதலுக்கு நீ
என் காமத்துக்கு கவிதை...

பூ வாடியது கண்டு
இதழ் குவிக்கிறாய்
வாடிப் போகிறேன்
நான்...

இப்பூவிற்கு வாசம்
இல்லை என்கிறாய்
நீ முகர்ந்துவிட்டாய்
அல்லவா இனி
வாசம் வந்து விடும்...

இறுதியாய்...

காதலித்து விடு...
இல்லையெனில்
இக்கடலுக்குள் தள்ளி விடு
மிதந்து கொண்டிருக்கும்
என் காதலை
கவிதையோடு கலந்து விடு!

என்ற என்னை புதுவிதமாய் உற்று பார்த்தபடி "இப்போது உன்னை காதலிப்பதாக சொன்னால் என்ன செய்வாய்?" என்றாய்.
"முழு நிர்வாணாமாய் சில்லிட்டு நிற்கும் அதிகாலை இலைமேல் பனித்துளியின் உள் இழுத்துச் சென்று அழுந்த முத்தமிடுவேன்".என்றவனை பொங்கி வழிந்த காதலுடன் உதட்டுடன் உயிர் உறிஞ்சியபடி முத்தமிடத் தொடங்கி இருந்தாய்.ஆர்ப்பரித்து அடங்கி கொண்டிருந்தது கடல்.





வறட்சியின் நிமித்தமாய்
உயிர் விட்டிருந்த
அச்சூன்யமிக்க வனாந்திரத்தில்
விருட்சம்
பலக்கண்டிருந்த
ஓர் ஆலமரம்
திக்கற்று
நின்று கொண்டிருந்தது!

நெடுந்தூர பயணத்தின்
முடிவில்
தன் பிறப்பிடம்
காண வந்திருந்த
காகம்
பழுப்பேறிய அதன்
நிலைக்கண்டு
பெருங்குரலெடுத்துக் கதறத்
துவங்கியது!

பெருக்கெடுத்து ஓடிய
கண்ணீர்த்துளிகள்
உழன்ற நாவின் வழியே
கிழவனின் விரல்களை ஒத்த
வேர்களை ஆதரவாய்த்
தழுவிச் செல்ல
அதன் நூற்றாண்டுகால
பசுமையான நினைவுகள்
கரையத் துவங்கியிருந்தன!

காமத்தின்
நாட்டிய நிழல்
கண்டு
நடுங்கி நிற்கிறது
இருள்!

அறை முழுதும்
வியாபித்திருந்த
நெருக்கத்தில்
கசியும் கதவிடுக்கின் ஊடே
திரும்பிச் செல்கிறது
ஒளி!

கட்டிலின் கால்கள்
மட்டுமே அறிந்த
காமத்தின் வேகத்தில்
நிலைகுத்தி நிற்கிறது
பல்லி!

தெறித்துச் சிதறிய
வியர்வையும்
விரவிக் கிடந்த
மணமும்
ஆனந்த களிக்கூர்கின்றன!

கொதித்து எழும்
எரிமலைகளுக்கிடையே
உருகி வழிகிறது
பனி!




பாலைவனத்தில்
தவறாய் துளிர்த்து விட்ட
செடி என் காதல்!

உன்
ஏளனப்பார்வை
உயிர்த்தின்னும்
வெக்கை!
குறும்புன்னகையோ
பெரும் மழை!
மழை வேண்டாம்
தூறலையாவது காட்டிவிடு!

உன்
மௌனத்தின் ஒவ்வொரு
நொடியிலும் குறை
பிரசவங்களாகிப் போகின்றது
என் காதல்!

என் கதறல்கள்
உணவுக்காக கத்தும்
காக்கை குஞ்சுகளை போன்றது
உயிர் பிச்சையாவது
கொடுத்துவிடு!

தேவதையின்
வரத்திற்காக
பின்தொடரும் யாகம்
செய்கிறேன்.
இல்லை என்றாவது
சொல்லிவிடு.
அப்படியாவது முற்று பெறட்டும்
என் காதல்!

காமம் தலைக்கேறி
மூளையை கிழிக்க
சிதறிய ரத்தம்
மூளை தழுவி
நரம்பில் பாய்ந்து கொண்டிருக்கிறது...

இதழ் கடித்து
முலை கசக்கி
சதைத் தின்ன
சர்ப்பத்தின் நாவில்
சிக்குண்ட
தவளை அவள்...

உள் நுழைத்து
உடல் பரவி
களி நர்த்தனம் புரிய
சிதறிய கண்ணீர்த்
துளியில்
நிர்வாணமாய் நான்...

விரவி கிடந்த
ஆலமரத்தின் இலை நுனி
பனித்துளியில் அமர்ந்து
சிரித்துக் கொண்டிருக்கிறான்
சிவன்!!!

Older Posts

Blogger Template by Blogcrowds