உனக்கும் எனக்குமாய்
இடைவெளி அதிகரித்த
ஓர் மழைக்கால இரவில்
குடைக் கைப்பிடியின்
பிசுபிசுப்பின் ஊடே
நீர் மிதித்து நடக்கிறேன்!

முன்னொரு மழைநாளில்
நம் நெருக்கத்தை கண்ட
தவளை இன்று
கேலியாய் கத்துகிறது!

இலையுடன் உறவுக்கொள்ள
பாய்ந்து வந்த ஒரு
மழைத்துளியின்
தோல்வியின் ஊடே...
நம் பிரிவிற்கான காரணமும்
உன் நினைவும் நழுவ
மெல்லிய வெற்றிடம் ஒன்று
சன்னமாய் வந்து
மனம் நிரப்புகிறது!

0 Comments:

Post a Comment



Newer Post Older Post Home

Blogger Template by Blogcrowds