காமம் தலைக்கேறி
மூளையை கிழிக்க
சிதறிய ரத்தம்
மூளை தழுவி
நரம்பில் பாய்ந்து கொண்டிருக்கிறது...

இதழ் கடித்து
முலை கசக்கி
சதைத் தின்ன
சர்ப்பத்தின் நாவில்
சிக்குண்ட
தவளை அவள்...

உள் நுழைத்து
உடல் பரவி
களி நர்த்தனம் புரிய
சிதறிய கண்ணீர்த்
துளியில்
நிர்வாணமாய் நான்...

விரவி கிடந்த
ஆலமரத்தின் இலை நுனி
பனித்துளியில் அமர்ந்து
சிரித்துக் கொண்டிருக்கிறான்
சிவன்!!!

2 Comments:

  1. சுசி said...
    நல்ல கவிதை... கொஞ்சம் பயமா இருக்கு...
    இளவட்டம் said...
    நன்றி சுசி.
    வருகைக்கும்.

Post a Comment



Newer Post Older Post Home

Blogger Template by Blogcrowds